பாடசாலைகளுக்கு 665 மடிக் கணனிகள்

கல்வி நடவடிக்கைகளை பயனுள்ள வகையில் மேம்படுத்த மடிக் கணனிகளை பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய நாடு முழுவதிலும் 9 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து மாகாணங்களிலும் ஒரு கல்வி வலயம் வீதம் தெரிவு செய்யப்பட்டு தரம் 6 முதல் தரம் 11 வரையான 665 
பாடசாலைகளுக்கு லப்டொப் கணனிகள் வழங்கப்படும். இதற்காக 2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதற்கான ஆவணத்தை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்தார். 
(அ.த.தி)
பாடசாலைகளுக்கு 665 மடிக் கணனிகள் பாடசாலைகளுக்கு 665 மடிக் கணனிகள் Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.