அதிபர்களுக்கு கடும் எச்சரிக்கை: ஜனாதிபதி, பிரதமரின் செல்வாக்கு என வந்தால் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம்:

 


ஜனாதிபதி, ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதமர், பிரதமரின் காரியாலய அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் வேண்டுகோள் அல்லது கட்டளை என்ற பெயரில் கடிதத்தோடு வருகின்ற மாணவர்களின் அனுமதியை செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
சில வேளைகளில் அரச அதிகாரிகளும் இவ்வாறான கடிதங்களை அனுப்புவதாக தெரியவந்துள்ளது. மாணவர் அனுமதி தொடர்பாக உள்ள நியதிகள், நடைமுறைகள் மாத்திரமே பின்பற்றப்பட வேண்டும் மாறாக கடிதங்களுக்கு மாணவர் அனுமதி மேற்கொள்ளக்கூடாது 
இவ்வாறு நடக்கும் அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலாளர் அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.
​00000
அதிபர்களுக்கு கடும் எச்சரிக்கை: ஜனாதிபதி, பிரதமரின் செல்வாக்கு என வந்தால் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம்: அதிபர்களுக்கு கடும் எச்சரிக்கை: ஜனாதிபதி, பிரதமரின் செல்வாக்கு என வந்தால் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம்: Reviewed by irumbuthirai on September 17, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.