சா.தர பரீட்சை மார்ச்சில் நடந்தாலும் ஜூன் மாதத்தில் உயர் தரத்திற்கு சேரலாம்...


Covid-19 பரவல் காரணமாக பிற்போடப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அதேவேளை இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மூன்று மாதங்களில் அதாவது எதிர்வரும் ஜூன் மாதமளவில் வெளியிட எதிர்பார்த்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 
ஜூன் மாதம் முடிவுகள் வந்ததும் ஜூன் மாதத்திலேயே உயர் தரத்திற்கு அவர்கள் இணைந்து கொள்ளலாம் எனவும் மேலும் தெரிவித்தார்.       
    
சா.தர பரீட்சை மார்ச்சில் நடந்தாலும் ஜூன் மாதத்தில் உயர் தரத்திற்கு சேரலாம்... சா.தர பரீட்சை மார்ச்சில் நடந்தாலும் ஜூன் மாதத்தில் உயர் தரத்திற்கு சேரலாம்... Reviewed by irumbuthirai on December 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.