ஏப்ரல் 21 தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேல்?


ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என அமைச்சர் சரத் வீரசேகர சொன்னபோதிலும், உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். 
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (7) நடைபெற்ற விவாதத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். 
இந்த தாக்குதலின் நடிகராக சஹ்ரான் செயற்பட்டிருக்கலாம். சாரா என்ற நடிகை காணாமல் போயுள்ளார். இந்த நிலையில், இந்த தாக்குதலின் 
பின்னணியில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
Pakkam Bin-abu என்ற நபர் குறித்தும் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவு தொடர்பிலும் ஆராய வேண்டியுள்ளது. 
மேலும் இத்தாக்குதலை திட்டமிட்டு வழிநடத்தியவர்கள் வௌியில் உள்ளனரா என்பது குறித்தும் ஆராய வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேல்? ஏப்ரல் 21 தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேல்? Reviewed by irumbuthirai on April 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.