ராதிகா மற்றும் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை... கொரோனா பாதிப்பில் ராதிகா...


2014ல் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து 'இது என்ன மாயம்' என்ற படத்தைத் தயாரித்தது ராதிகா, சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃப்ரேம்ஸ் என்ற நிறுவனம். 
இந்த படத் தயாரிப்பிற்காக ரேடியண்ட் என்ற நிறுவனத்திடமிருந்து மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் 
ஒன்றரைக் கோடி ரூபாயை கடனாகப் பெற்றது. இந்த பணத்தை திருப்பித் தராத காரணத்தால் இது தொடர்பாக ரேடியண்ட் நிறுவனத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதில் சரத்குமார், ராதிகா இருவருக்கும் தலா ஓரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
மேல் முறையீடு செய்யும்வரை சிறை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென சரத்குமார் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டதற்கமைய சரத்குமாருக்கு மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமளித்து தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை ராதிகா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதால், அதிலிருந்து மீண்டவுடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என அவர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறார்.
ராதிகா மற்றும் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை... கொரோனா பாதிப்பில் ராதிகா... ராதிகா மற்றும் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை... கொரோனா பாதிப்பில் ராதிகா...  Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.