அரச ஊழியர்களுக்கான சகல மேலதிக கொடுப்பனவுகளும் இடைநிறுத்தம்! புதிய நியமனங்களுக்கும் அனுமதியில்லை!!

 

அரசாங்கம் மற்றும் அரசு சார்ந்த துறைகளில் எவ்வித புதிய நியமனங்களும் வழங்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தும் புதிய சுற்றுநிருபம் நிதி அமைச்சினால் ஏனைய அமைச்சுகளுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பான தீர்மானம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
இது மாத்திரமன்றி அரச ஊழியர்களுக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப்படும் சகலவிதமான மேலதிக கொடுப்பனவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
 
உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது மாத்திரமன்றி வேலைக்கு சமூகம் அளிக்கும் உண்மையான நாட்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும். 
 
இது தொடர்பான சுற்று நிருபத்தை கீழே காணலாம்.

 
அரச ஊழியர்களுக்கான சகல மேலதிக கொடுப்பனவுகளும் இடைநிறுத்தம்! புதிய நியமனங்களுக்கும் அனுமதியில்லை!! அரச ஊழியர்களுக்கான சகல மேலதிக கொடுப்பனவுகளும் இடைநிறுத்தம்! புதிய நியமனங்களுக்கும் அனுமதியில்லை!!  Reviewed by irumbuthirai on September 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.