சா.தர மற்றும் உ.தர வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்கள்!

 

மேல் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளில் இம்மாதம் 21ஆம் திகதி சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (09) கண்டியில் வைத்து ஊடகங்களுக்க தெரிவித்துள்ளார். 
 
ஆனால் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன 

அவ்வாறான தீர்மானமேதும் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்துள்ளார். 
 
4 கட்டங்களாக பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதில் முதல் கட்டம் இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த முதல் கட்டத்தில் சா.தர மற்றும் உ.தர வகுப்புக்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சா.தர மற்றும் உ.தர வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்கள்! சா.தர மற்றும் உ.தர வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்கள்! Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.