அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்திக்கும் பிரதமர்!

 

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் 90 நாட்களையும் கடந்து செல்கிறது. 
 
இதற்காக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தீர்வு இல்லை. 
 
இந்நிலையில் பிரதமருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 
 
நாளை திங்கட்கிழமை(11) இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளைய பேச்சுவார்த்தைகள் மூலம் சாதகமான 
 
முடிவுகள் எட்டப்படலாம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 
 
இதேவேளை நாளைய தினம் இடம்பெறும் சந்திப்பை கல்வி அமைச்சின் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். பாடசாலைகள் மீள ஆரம்பமானதும் ஆசிரியர்கள் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் என உறுதியாக நம்புவதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்திக்கும் பிரதமர்! அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்திக்கும் பிரதமர்! Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.