உ.தர தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் (சுஜாதா தியானி புலமைப்பரிசில்) - 2020/2022 (சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் இணைப்பு)

 

தொழில்நுட்பவியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் தொழிநுட்பவியல் மற்றும் சுஜாதா தியனி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் - 2020/ 2022. 
 
க.பொ.த. (உ/த) தொழில்நுட்பவியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக தொழில்நுட்பவியல் மற்றும் சுஜாதா தியனி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 
 
அதன்படி, 2020/2022 கல்வி ஆண்டுக்குரிய உதவித் தொகையினை வழங்கும் பொருட்டு உங்கள் பாடசாலையில் க.பொ.த. (உ/த) தொழில்நுட்பவியலில் கல்வி கற்கும், 2022 இல் க.பொ.த. (உ/த) பரீட்சைக்குத் தோற்றும் கீழே உள்ள நியதிகளுக்குட்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க தகைமை பெறுவர். 

 
நியதிகள்: 
 
01. க.பொ.த. (உ.த) வகுப்புகளுக்கு நுழைவதற்கான தகைமையான க.பொ.த. (சா/த) பரீட்சையில் உயர்ந்த சித்தியினை பெற்றிருத்தல் வேண்டும். 
 
02. இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும். 
 
03. க.பொ.த. (உ/த) தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்க வேண்டும். 
 
04. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 120,000/- அல்லது அதை விடக் குறைவாக இருத்தல் வேண்டும். 
 
05. நல்லொழுக்கம் உடையவராக இருத்தல் வேண்டும். 
 
இது தொடர்பான முழுமையான விபரங்கள்:
 

 
 
விண்ணப்ப படிவம்:

உ.தர தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் (சுஜாதா தியானி புலமைப்பரிசில்) - 2020/2022 (சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் இணைப்பு) உ.தர தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் (சுஜாதா தியானி புலமைப்பரிசில்) - 2020/2022 (சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on October 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.