பாடசாலை திறப்புகளை அதிபர்களிடமிருந்து பலவந்தமாக பெற முயற்சி!

 

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிபர்களிடமிருந்து பாடசாலை திறப்புகளை பலவந்தமாக பெறுவதற்கு அரசியல்வாதிகள் முயன்று வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 
 
அமைச்சர் காமினி லொக்குகே உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் அதிபர்களுக்கு 
 
தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்ததாக அறிய முடிகிறது. 
 
200-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் அதிபர்களை பொலிஸாரும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டுள்ளனர். போலீசாருக்கு பொறுப்பாக உள்ள சரத் வீரசேகர அமைச்சரே இதனை செய்கிறார். இது அபாயகரமான விடயமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாடசாலை திறப்புகளை அதிபர்களிடமிருந்து பலவந்தமாக பெற முயற்சி! பாடசாலை திறப்புகளை அதிபர்களிடமிருந்து பலவந்தமாக பெற முயற்சி! Reviewed by Irumbu Thirai News on October 17, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.