அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும்! ஆளுநர் எச்சரிக்கை!


சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் 100 நாட்களை எட்டியுள்ளது. 
 
இந்நிலையில் அரசாங்கம் கூறுவதைப் போன்று 21 மற்றும் 22ம் திகதிகளில் பாடசாலைக்கு செல்ல மாட்டோம். 25ஆம் திகதியே பாடசாலைக்கு செல்வோம் என அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்திருக்கிறது. 
 
ஆனால் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு எதிரான தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த தீர்மானத்தை எழுத்து மூலம் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராவிடம் குறித்த கூட்டமைப்பு நேற்று சமர்ப்பித்துள்ளது. 
 
இந்நிலையில் 21ம் தேதி பாடசாலை ஆரம்பமானதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும் என வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
இது மாத்திரமன்றி 25ஆம் தேதி அவர்கள் பாடசாலைக்கு வந்தால் பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும்! ஆளுநர் எச்சரிக்கை! அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும்! ஆளுநர் எச்சரிக்கை! Reviewed by Irumbu Thirai News on October 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.