சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவு ஆரம்பம்! திகதி அறிவிப்பு!

 

சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
அந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது 25 ஆம் திகதி சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
கொரோனா காரணமாக கடந்த ஆறு மாதமாக மூடப்பட்ட பாடசாலைகளை நான்கு கட்டங்களில் மீள ஆரம்பிப்பதற்கான பரிந்துரைகளை சுகாதார அமைச்சு கல்வி அமைச்சுக்கு வழங்கியிருந்தது. 
 
அந்தவகையில் முதலாம் கட்டத்தில் 200க்கும் குறைவான ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. 
 
இதேவேளை தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்றும் இன்றும் பெரும்பாலான அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. அவர்கள் 25ஆம் திகதி முதலே தமக்கு பாடசாலைக்குச் செல்லலாம் என ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவு ஆரம்பம்! திகதி அறிவிப்பு! சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவு ஆரம்பம்! திகதி அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on October 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.