கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் - கல்வியமைச்சர்


கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
திட்டமிட்டபடி 98% மான பாடசாலைகளை மீள திறக்க முடிந்தது. 26% ஆன ஆசிரியர்களும் 16% ஆன மாணவர்களும் பாடசாலைக்கு சமூகம் அளித்துள்ளனர். அடுத்த வாரம் ஆசிரியர் மாணவர் வருகை அதிகரிக்கும் என நான் நம்புகிறேன். 
 
மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது...
 
ஆசிரியர்கள் மொடியூலை நிறைவு செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது...
 
சில ஆசிரியர்கள் கையொப்பமிடாமலும் பணிக்கு திரும்பியுள்ளனர். துரிதமாக பாடசாலைகளைத் திறந்து நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவது முக்கியமாகும். எனவே இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் - கல்வியமைச்சர் கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் - கல்வியமைச்சர் Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.