மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிப்பு!


மேலதிக வகுப்புக்களை (ரியுசன்) எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என அகில இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
இது தொடர்பில் அச்சங்கத்தின் செயலாளர் கமல் பிரியங்கர தெரிவித்ததாவது, 
 
டியூஷன் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தந்துள்ளார். அந்தவகையில் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் இது ஆரம்பிக்கப்படும். 
 
கடந்த காலங்களில் ஆசிரியர் தொழிற்சங்க வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் எமது சங்கம் Online மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. எனவே மாணவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாக அமையவில்லை. 
 
தடுப்பூசி பெறும் மாணவர்களுக்கு பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகளுக்கு...
 
தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் ஒரு லட்சம் டியூஷன் ஆசிரியர்கள் இருக்கின்றனர். இது மாத்திரமன்றி சாதாரண தர, உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு கற்பிக்கப்பட உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிப்பு! மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.