நீடிக்கப்பட்டது ஆசிரியர்களுக்கான மொடியூல் (Module) கால எல்லை! (கடிதம் இணைப்பு)


ஆசிரியர்களுக்கான மொடியூலைப் (Module) பூர்த்தி செய்வதற்கான கால எல்லை மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
22-10-2021 திகதி இடப்பட்ட கடிதம் மூலம் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட கால எல்லை 22-10-2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
 
ஆசிரியர்களின் வினைத்திறன் தடைதாண்டல் செயற்பாடுகள் (மொடியூல்) இதுவரை நிறைவு செய்யப்படாமல் இருப்பதாலும் அந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்காக அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் 06-10-2021 திகதி இடப்பட்ட கடிதம் மூலம் 22-10-2022 வரை கால எல்லையை நீடிக்க அனுமதி அளித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
SLTES-1 அலுவலர்களைப் பதவியில் நியமித்தல் தொடர்பாக கல்வியமைச்சின் அறிவித்தலைப் பார்வையிட... 
 
அதனடிப்படையில் தமது பதவி உயர்வுக்கான தகைமைகளை நிறைவு செய்துள்ள ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு 22-10-2022 ற்கு பின்னர் பதவி உயர்வு பெறும் சகல ஆசிரியர்களும் குறித்த காலப்பகுதிக்குள் தமக்குரிய வினைத்திறன் தடைதாண்டல் செயற்பாடுகளை நிறைவு செய்துகொள்ள வேண்டும். 
 
இது தொடர்பாக கல்வி அமைச்சால் வெளியிடப்பட்ட கடிதத்தைக் கீழே காணலாம். 

நீடிக்கப்பட்டது ஆசிரியர்களுக்கான மொடியூல் (Module) கால எல்லை! (கடிதம் இணைப்பு) நீடிக்கப்பட்டது ஆசிரியர்களுக்கான மொடியூல் (Module)  கால எல்லை! (கடிதம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.