ஒரே பாடசாலையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா!


ஒரே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பிரதேச பாடசாலை ஒன்றிலேயே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து குறித்த வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் உயிர் குமிழி (Bio Bubble) முறைமையின் கீழ் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க சுகாதார தரப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஒரே பாடசாலையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா! ஒரே பாடசாலையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா! Reviewed by Irumbu Thirai News on January 18, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.