சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: - பரீட்சைத் திணைக்களம்


கடந்த வருடத்திற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இம்மாதம் 22ஆம் திகதி சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக நடத்துவதற்குரிய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
இம்முறை இந்த பரீட்சைக்காக 496 இணைப்பு நிலையங்களும் 2,943 பரீட்சை நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இம்முறை 340,508 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றுகின்றனர். 
 
மேலும் மாணவர்கள் உட்பட சகலரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார்.
சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: - பரீட்சைத் திணைக்களம் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: -  பரீட்சைத் திணைக்களம் Reviewed by Irumbu Thirai News on January 18, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.