கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்..


நாளை மறுதினம் நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விவரங்களை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார். 
 
வழமைக்கு மாற்றமாக ஞாயிற்றுக்கிழமை அல்லாமல் சனிக்கிழமை இம்முறை பரீட்சை நடைபெறுகிறது. 
 
முதலாவது வினாப்பத்திரம் காலை 9:30 மணியிலிருந்து 10:30 வரை நடைபெறும். இரண்டாவது வினாப்பத்திரம் காலை 11 மணியிலிருந்து 12:15 மணி வரை நடைபெறும். 
 
இம்முறை 2943 பரீட்சை நிலையங்களில் மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் பரிட்சைக்கு தோற்றுகின்றனர். 
 
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக 108 பிரத்தியேக பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்.. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்.. Reviewed by Irumbu Thirai News on January 20, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.