இன்று முதல் நாடளாவிய ரீதியில் CEYPETCO நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் முறை...



நீண்ட நாட்களுக்கு பிறகு நாடளாவிய ரீதியில் உள்ள CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று(21) முதல் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகிறது. 

இவ்வாறு எரிபொருள் வழங்கப்படும் போது பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படும்.

(1) வாகனத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் இந்த எரிபொருள் விநியோகம் இடம்பெறும். 

0,1,2 - செவ்வாய் மற்றும் சனி. 

3,4,5 - வியாழன் மற்றும் ஞாயிறு. 

6,7,8,9 - திங்கள், புதன் மற்றும் வெள்ளி 

ஆகிய தினங்களில் வழங்கப்படும். 

(2) வரையறுக்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படும். 

மோட்டார் சைக்கிள் - ரூ. 1,500/-

முற்சக்கரவண்டி - ரூ. 2,000/-

ஏனைய வாகனங்கள் - ரூ. 7,000/-  

இந்த நடைமுறையை பின்பற்றாத நபர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என்பதுடன் விதிமுறைகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போதைய தகவல்களின்படி, இந்த நடைமுறை எதிர்வரும் 24 ஆம் தேதி வரை இடம்பெறும். 25 ஆம் தேதி முதல் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (National Fuel Pass) அடிப்படையில் நாடளாவிய ரீதியில் விநியோகம் இடம்பெறும்.

Fuel Pass இன் பரீட்சார்த்த நடவடிக்கை இன்று கொழும்பு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related:


இன்று முதல் நாடளாவிய ரீதியில் CEYPETCO நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் முறை... இன்று முதல் நாடளாவிய ரீதியில்  CEYPETCO நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் முறை... Reviewed by Irumbu Thirai News on July 21, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.