கடந்த ஐந்து வருட காலப்பகுதியில், முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரை கல்வி கற்கும் சுமார் 2 லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக புனர்வாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் இவ்வாறு பாடசாலையை விட்டு விலகுவதற்கு போதைப்பொருள் பாவனையே மிக முக்கியமான காரணியாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு பணியகத்தின் நிர்வாக சபை பணிப்பாளர் பேராசிரியர் வசந்த சுபசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனால், பாடசாலைக் கல்வியை பாதியில் நிறுத்தும் மாணவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், அவர்கள் போதைப்பொருள் பழக்கம் போன்ற ஆபத்தான சூழ்நிலைகளுக்குள் தள்ளப்படுவதைத் தடுப்பதற்கு உடனடி மற்றும் துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Previous:
பாடசாலையை விட்டு இடை விலகும் மாணவர்கள்
Reviewed by Irumbu Thirai News
on
September 04, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
September 04, 2026
Rating:

No comments: