மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பாக WHO வின் அறிவித்தல்..
irumbuthirai
August 05, 2021
செப்டம்பர் மாதம் நிறைவடையும் வரையாவது 3வது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.
இதனால் வறிய நாடுகளின் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை பாதிக்கப்படும். எனவே இந்த 3வது தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நிறுத்தும் போது, ஒவ்வொரு நாட்டினதும் 10% ஆன மக்களுக்காவது தடுப்பூசியை ஏற்றக்கூடியதாகவிருக்கும். 
இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பாக WHO வின் அறிவித்தல்..
 
        Reviewed by irumbuthirai
        on 
        
August 05, 2021
 
        Rating: 
 
        Reviewed by irumbuthirai
        on 
        
August 05, 2021
 
        Rating: 














