உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இன்று இலங்கையில் தரையிறக்கப்பட்டது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது முறையாக உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் தரையிறங்கியுள்ளது.
 துபாயிலிருந்து மெல்போர்ன் நகரத்திற்கு  420 பயணிகளுடனும் 22 விமான பணியாளர்களுடன் சென்று கொண்டு இருந்த விமானமே தரையிறக்கப்பட்டுள்ளது.

அவ் விமானத்தில் பணிபுரியும் 32 வயதுடைய பணியாளர் ஒருவருக்கு  திடீர்னு சுகயீனம் ஏற்பட்ட காரணமாகவே இன்று காலை கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளது..



 இன்று காலை நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அப் பணியாளர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலை காரணமாக் அவ் விமானம் இரண்டு மணிநேரத்தின் பின்னரே  கட்டுநாயக்காவிலிருந்து அவுஸ்ரேலியாக்கு சென்றது..
கட்டுநாயக்கா விமான நிலையம் அமைக்கப்பட்ட பின் இடம்பெற்ற கண்காச்சியின் போது எமிரேட்ஸ்ஸின் A380 முதல் தடவையாக தரையிறக்கப்பட்டுள்ளது...
இது இரண்டாவது தடவையாகும்
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இன்று இலங்கையில் தரையிறக்கப்பட்டது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இன்று இலங்கையில் தரையிறக்கப்பட்டது Reviewed by Tamil One on December 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.