வீட்டிலிருக்கும் கொரோனா தொற்றாளர்கள் பற்றி அறிய புதிய தொலைபேசி இலக்கம்


வீடுகளில் கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் விசேட செய்திட்டம் நேற்று (28) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
இதற்கமைய, 1390 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இதன் மூலம் வீடுகளில் வைத்து பராமரிப்பதற்கான கொரோனா நோயாளிகளை தெரிவுசெய்வதற்காக, விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியர் குழுவினால் தினமும் தொலைபேசியூடாக ஆராயப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
இந்த புதிய திட்டத்தின் மூலம் நோய் அறிகுறி உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளர்கள் மற்றும் ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளில் அனுமதிக்கும்போது முன்னுரிமையளிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வீட்டிலிருக்கும் கொரோனா தொற்றாளர்கள் பற்றி அறிய புதிய தொலைபேசி இலக்கம் வீட்டிலிருக்கும் கொரோனா தொற்றாளர்கள் பற்றி அறிய புதிய தொலைபேசி இலக்கம் Reviewed by irumbuthirai on June 29, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.