பாடசாலைகளைப் போன்றே நடத்தப்படும் தொலைக்காட்சி சேவைகள்: அரசின் புதிய திட்டம்:


தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுனாமி போன்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளின் போதும் ஈடு கொடுக்கக் கூடிய வகையில் பாடசாலைகளைப் போன்றே மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30மணிவரை தொலைகாட்சி அலைவரிசை ஊடாக நடாத்தும் திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு 20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக மாணவர்களுக்கு 
வீடுகளிலிருந்தே கற்பதற்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. 
மேலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு முன்னுரிமையளித்து, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளைப் போன்றே நடத்தப்படும் தொலைக்காட்சி சேவைகள்: அரசின் புதிய திட்டம்: பாடசாலைகளைப் போன்றே நடத்தப்படும் தொலைக்காட்சி சேவைகள்: அரசின் புதிய திட்டம்: Reviewed by irumbuthirai on June 30, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.