Online கல்வி முறைமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!


Online கல்வி முறைமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் (28) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தினாலேயே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
அதாவது சகல மாணவர்களுக்கும் Online கல்வி 
சம அளவில் கிடைக்காமையால் மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்தே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 மேலும் மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் 02 வருடங்களாக இல்லாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் தனது முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இந்த முறைப்பாடு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ உள்ளிட்ட சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுராதபுரம் அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Online கல்வி முறைமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு! Online கல்வி முறைமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு! Reviewed by irumbuthirai on June 29, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.