திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியருக்கும் கொரோனா!


திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு சென்று வந்த வைத்தியருக்கு காய்ச்சல் ஏற்படவே அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதனடிப்படையில் இவருடன் சேவையாற்றிய இன்னும் மூன்று வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியருக்கும் கொரோனா! திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியருக்கும் கொரோனா! Reviewed by irumbuthirai on November 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.