மீண்டும் உம்ரா கடமை.... அனுமதி கிடைக்கும் வயதுப் பிரிவினர் இவர்கள்தான்...


07 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று (01) முதல் வெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் உம்ரா கடமையை நிறைவேற்ற சவுதி அனுமதி வழங்கியுள்ளது. 
முதல் நாளான நேற்று 
பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 10,000 யாத்ரீகர்கள் உம்ரா யாத்திரை செய்ய அனுமதிக்கப்பட்டனர். 
வெளிநாட்டு யாத்ரீகர்கள் சௌதி அரேபியாவுக்கு வந்த பின்னர் 03 நாட்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். 
அதேபோன்று 18-50 வரையான வயதுவயதுப்பிரிவினர் மாத்திரமே தற்போது அனுமதிக்கப்படுகின்றனர். 
சௌதியில் படிப்படியாக கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதை தொடர்ந்து அந்த நாட்டு அரசாங்கம் படிப்படியாக அங்குள்ள பள்ளிவாயல்களையும் திறந்து வருகிறது. 
முன்னதாக, சௌதி அரேபியாவை சேர்ந்தவர்கள் கடந்த அக்டோபர் மாதம் முதல் உம்ரா கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் உம்ரா கடமை.... அனுமதி கிடைக்கும் வயதுப் பிரிவினர் இவர்கள்தான்... மீண்டும் உம்ரா கடமை.... அனுமதி கிடைக்கும் வயதுப் பிரிவினர் இவர்கள்தான்... Reviewed by irumbuthirai on November 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.