கொரோனா எதிர்ப்பு சக்தி: 10 மருந்துகளுக்கு அனுமதி:


கொரோனாவிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக கூறப்படும் 10 புதிய மருந்துகளுக்கு ஆயுர்வேத திணைக்களத்தின் விடயத்துக்கு பொறுப்பான குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. 
அதாவது நோய் எதிர்ப்பு பானம் என்ற வகையில் இந்த மருந்துகளுக்கு 
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார். 
ஆயினும், இதனூடாக கொரோனா தொற்றுக்கான விசேட நோய் எதிர்ப்பு சக்தி உடலில் ஏற்படுகின்றதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் கூறினார். 
இதேவேளை இவ்வாறான புதிய 30 மருந்துகள் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா எதிர்ப்பு சக்தி: 10 மருந்துகளுக்கு அனுமதி: கொரோனா எதிர்ப்பு சக்தி: 10 மருந்துகளுக்கு அனுமதி: Reviewed by irumbuthirai on January 18, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.