மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்...


மேல் மாகாண பாடசாலைகளை மீள திறப்பதற்கான சாத்தியம் குறித்து நேற்று (20) கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில், 
 சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில், எந்தெந்த பாடசாலைகளை மீள திறக்கலாம் என்பது தொடர்பில் பரிந்துரைக்குமாறு அதிபர்களை கேட்பதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்ட அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி எந்தெந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பரிந்துரைகளை எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
அதன் பின்னர் குறித்த பரிந்துரைகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, மீளாய்வு செய்யப்பட்டதன் பின்னர், எதிர்வரும் பெப்ரவரி 15 திகதியளவில் எந்தெந்த பாடசாலைகளை திறக்க முடியும் என்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்... மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்... Reviewed by irumbuthirai on January 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.