வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம்:


மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக தமது மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. 
இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டவர்களில் 7,727 பேரின் வாக்காளர் பதிவை, அதிகாரிகள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளதாக ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 
இவ்வாறு நீக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் எந்தவொரு 
பிரதேசத்திலும் தற்போது வாக்குகள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே, அவர்களது வாக்குகளை மீள அதே கிராமங்களில் பதிய நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம்: வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம்: Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.