இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்கப்படும் மொயீன் அலி..


டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 
 இதனால் இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இவரால் விளையாட முடியாமல் போயிருந்தது. 
இந்தநிலையில் கடந்த 24 மணித்தியாலயங்களில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட 02 PCR பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா தொற்று 
உறுதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. 
இதன் காரணமாக அவரை இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்கப்படும் மொயீன் அலி.. இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்கப்படும் மொயீன் அலி.. Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.