சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொரோனா: நுகர்வோருக்கும் விற்பனை:


சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமை ஆராய்ச்சி செய்த போது அதில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
தியான்ஜினில் உள்ள டேசியாடோ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மொத்தம் 4,836 பெட்டிகள் ஐஸ்கிரீம் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 2,089 பெட்டிகள் இதுவரை களஞ்சியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
மீதமுள்ள ஐஸ்கிரீம் பெட்டிகளில், 1,812 மற்ற மாகாணங்களுக்கும் 935 பெட்டிகள் தியான்ஜின் 
சந்தைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 65 நுகர்வோருக்கு விற்கப்பட்டுள்ளன. 
ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையில் மொத்தம் 1,662 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொரோனா: நுகர்வோருக்கும் விற்பனை: சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொரோனா: நுகர்வோருக்கும் விற்பனை: Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.