நாங்கள் கொரோனாவைக் கண்டு ஓடி ஒழிபவர்கள் அல்ல - GMOA. (அறிக்கை இணைப்பு)


நாங்கள் கொரோனாவைக் கண்டு ஓடி ஒழிபவர்கள் அல்ல மாறாக அச்சமின்றி எதிர்க்கொண்ட குழுவினரே என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 
இந்த சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனிய கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய ஒருவராக இனங்காணப்பட்ட சம்பவம் தொடர்பிலான விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் விதமாக இந்த அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. 
தொற்றாளர்களை அடிக்கடி சந்திக்கும் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனியவின் வார்ட்டில் உள்ள வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை ஒன்றும் எதிர்பாராத விடயமல்ல எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதேவேளை தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய குறித்த நபரின் தனிப்பட்ட விபரங்கள் பகிரங்கப்படுத்தக்கூடாது. அது இங்கு மீறப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த அறிக்கையை கீழே காணலாம்.


நாங்கள் கொரோனாவைக் கண்டு ஓடி ஒழிபவர்கள் அல்ல - GMOA. (அறிக்கை இணைப்பு) நாங்கள் கொரோனாவைக் கண்டு ஓடி ஒழிபவர்கள் அல்ல - GMOA. (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.