அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் முறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை (சுற்றறிக்கை இணைப்பு)


தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியில் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்தனசிறியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 
இதேவேளை ஏற்கனவே வெளியிடப்பட்ட 02/2021 இலக்கம் கொண்ட அரச சேவையை தடையின்றி நடந்து செல்லல் என்ற தலைப்பில் வெளியான சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஊழியர் ஒருவருக்கு வாரத்துக்கு 02 நாட்கள் என்ற அடிப்படையில் மாதத்திற்கு உயர்ந்த பட்சமாக 08 நாட்கள் வேலைக்கு சமூகமளிக்காதிருக்கலாம். இதனை அவர்களது சொந்த லீவில் கழிக்கக் கூடாது எனவும் புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 வேலைக்கு வராத நாட்கள் வீட்டிலிருந்தே இணையம் மூலமாக வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். 
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறாத ஊழியர் ஒருவர் வேறு காரணங்களுக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் குறித்த காலத்தை சம்பளத்துடனான விடுமுறையாக கருத வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.



அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் முறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை (சுற்றறிக்கை இணைப்பு) அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் முறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on April 28, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.