சகல பாடசாலைகளையும் மூடல்: கட்டங்கட்டமாக வந்த அறிவிப்புகள் அமைச்சரவையில் முழுமையானது:


இம்மாதம் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 
இம்மாதம் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
அத்துடன் சகல தனியார் வகுப்புகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
ஏற்கனவே வலய ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் பாடசாலைகளை 
மூடுவதற்கு சம்பந்தப்பட்ட ஆளுநர்களால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மூட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க ஆயர் இல்லமும் அறிவித்துள்ளது.
சகல பாடசாலைகளையும் மூடல்: கட்டங்கட்டமாக வந்த அறிவிப்புகள் அமைச்சரவையில் முழுமையானது: சகல பாடசாலைகளையும் மூடல்: கட்டங்கட்டமாக வந்த அறிவிப்புகள் அமைச்சரவையில் முழுமையானது: Reviewed by irumbuthirai on April 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.