அரச செலவுகளைக் கட்டுப்படுத்த ஓய்வுபெற்றோர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!


அரச செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக நிதி அமைச்சின் செயலாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய அரச சேவைகள் ஆணைக்குழு ஓய்வுபெற்றோர் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த அரச சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? பிரதமரின் அறிவிப்பு!

இந்த தீர்மானம் தொடர்பில் சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விண்ணப்பங்களை மறு அறிவித்தல் வரை சமர்ப்பிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு தற்போதைய அதிகாரிகளைக் கொண்டே நிரப்புவதில் கூடிய கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச செலவுகளைக் கட்டுப்படுத்த ஓய்வுபெற்றோர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! அரச செலவுகளைக் கட்டுப்படுத்த ஓய்வுபெற்றோர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! Reviewed by Irumbu Thirai News on May 28, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.