தனிமைப்படுத்தப்பட்ட இரு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள்:


சுகாதார முறைகளைப் பின்பற்றாது இரகசிய முறையில் தலவாக்கலை நகரில் மேலதிக வகுப்புக்களை நடாத்திய இரு ஆசிரியர்களும் வகுப்பில் கலந்துகொண்ட 14 மாணவர்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால தெரிவித்துள்ளார். 
தமக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், இரு ஆசிரியர்களும் 14 மாணவர்களும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் அவரவர் வசிப்பிடங்களிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 
க.பொ.த. (உ.தர) பாடங்களுக்கான மேலதிக வகுப்புக்களையே இவ்வாறு நடாத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி: நிவ்ஸ்வய)

தனிமைப்படுத்தப்பட்ட இரு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள்: தனிமைப்படுத்தப்பட்ட இரு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள்: Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.