மாளிகாவத்தை சம்பவம்: 6 பேருக்கு விளக்கமறியல்:



நேற்று (21) கொழும்பு – மாளிகாவத்தையில்  இடம்பெற்ற பண பங்கீடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரை எதிர்வரும் ஜூன் மாதம் நான்காம் திகதி வரையில் விளக்கமறியளில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவு பிறப்பித்தது. 
நேற்றைய தினம் கொழும்பு – மாளிகாவத்தையில்  இடம்பெற்ற பணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். 68, 62, 59 வயதுடைய பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த நெரிசலில் சிக்கிய மேலும் 9 பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் பணப்பகிர்வு இடம்பெற்றிருப்தாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

மாளிகாவத்தை சம்பவம்: 6 பேருக்கு விளக்கமறியல்: மாளிகாவத்தை சம்பவம்: 6 பேருக்கு விளக்கமறியல்: Reviewed by irumbuthirai on May 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.