ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (23.05.2020)



நேற்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்ட அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று (23) புதிய அறிவித்தலை ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது. அந்த அறிவித்தல் வருமாறு: 
மே 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும். மே 26 செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும். 
நாளை, 24 ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். 
மொஹான் சமரநாயக்க 
பணிப்பாளர் நாயகம் 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
2020.05.23

(அ.த.தி)

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (23.05.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (23.05.2020) Reviewed by irumbuthirai on May 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.