வதந்திகளை மறுத்த கல்வி அமைச்சர்: இதுதான் நடக்கும் என விளக்கினார்:



பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்யப்படுகின்ற ஆயத்த வேலைகளில் உடல் வெப்பநிலையை அளவிட கூடிய கருவி மாத்திரமே அரசினால் வழங்கப்படும் ஏனையவை பாடசாலையே செய்துகொள்ளவேண்டும் என்ற செய்தி பிழையானது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மறுத்திருக்கிறார். இதற்காக மூன்று விடயங்கள் அரசினால் வழங்கப்படும். உடல் வெப்பநிலை அளவிடக்கூடிய கருவி, கைகளை கழுவ கூடிய சிங்க் வசதி, அதேபோன்று மருத்துவ வசதிகளைக் கொண்ட கட்டில் அல்லது அதனை கொண்ட அறை. இதற்காக 200 விட குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு 

30 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார். இதற்காக 680 மில்லியன் ரூபா செலவாகும் என இப்பொழுது கணக்கிடப்பட்டிருக்கிறது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வதந்திகளை மறுத்த கல்வி அமைச்சர்: இதுதான் நடக்கும் என விளக்கினார்: வதந்திகளை மறுத்த கல்வி அமைச்சர்: இதுதான் நடக்கும் என விளக்கினார்: Reviewed by irumbuthirai on May 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.