வரலாற்றில் முதன்முறையாக வீடியோ முறையில் வழக்கு விசாரணை


வரலாற்றில் முதன்முறையாக வீடியோ முறையில் வழக்கு விசாரணை இன்று (20) இடம்பெற்றதாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீராக்க அமைச்சு அறிவித்துள்ளது. புதுக்கடை மஜிஸ்திரேட் நீதிமன்றமும் வெலிக்கடை சிறைச்சாலையும் இவ்வாறு வீடியோ தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது. 
இதன் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படாமல் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட விஷேட தொழில்நுட்ப பகுதியில் வைத்து நீதிமன்றத்தோடு இணைக்கப்பட்டு இந்த முதல் கட்ட நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் காலங்களில் நாடு பூராகவும் இந்த முறை பயன்படுத்தப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 
இந்நிகழ்வில் நீதி, மனித உரிமைகள் மற்று சட்ட மறுசீராக்க அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா புதுக்கடை பிரதான மஜிஸ்திரேட் நீதவான் லங்கா ஜயரத்ன அவர்களும் இன்னும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 
(நிவ்ஸ்வய)

வரலாற்றில் முதன்முறையாக வீடியோ முறையில் வழக்கு விசாரணை வரலாற்றில் முதன்முறையாக வீடியோ முறையில் வழக்கு விசாரணை Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.