ஜோர்ஜ் பிளாய்ட் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை



அண்மையில் ஜோர்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் அமெரிக்காவில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் பல்வேறு போராட்டங்கள் இப்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் கொல்லப்பட்ட ஜோர்ஜ் பிளாய்ட் குடும்பத்தினர் முக்கிய கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். 
வன்முறைக்கு வழி வகுக்காமல் அமைதி காக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதேவேளை நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் 12 பேரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஜோர்ஜ் பிளாய்ட்டின் மனைவி கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இனி எனது மகளோடு கைகோர்த்து நடக்க அவர் வரப்போவதில்லை எனது மகள் பட்ட படிப்பை முடிப்பதைப் பார்க்க அவர் வரப் போவதில்லை என கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜோர்ஜ் பிளாய்ட் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை ஜோர்ஜ் பிளாய்ட்  குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை Reviewed by irumbuthirai on June 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.