நாளைய தேர்தல் ஒத்திகை நடப்பது இவ்வாறுதான்...



சுகாதார விதிமுறைகளுக்கு அமைவான தேர்தலை ஒத்திகை பார்க்கும் நிகழ்வு நாளை அம்பலாங்கொடை விலேகொட தம்மியுக்திகாராம விகாரையில் இடம்பெறவுள்ளது. முற்பகல் 10 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இடம்பெறும் இந்நிகழ்வுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமை தாங்க உள்ளார். சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேர்தலை நடத்தும் பொழுது ஏற்படும் பிரச்சினைகளை கண்டறிவதே இதன் பிரதான நோக்கமாகும். 
சுமார் 200 வாக்காளர்கள் பங்குபற்றும் இந்நிகழ்வில் 

சமூக இடைவெளி அதேபோன்று முககவசம் அணிதல் மற்றும் கிருமித் தொற்று நீக்க பாவனை, தேசிய அடையாள அட்டையை கையால் பிடிக்காமல் சுகாதார விதிமுறைகளுக்கமைவாக செயற்படல் போன்ற விடயங்கள் இந்நிகழ்வில் இடம்பெறவிருகின்றன.
நிவ்ஸ்வய.

நாளைய தேர்தல் ஒத்திகை நடப்பது இவ்வாறுதான்... நாளைய தேர்தல் ஒத்திகை நடப்பது இவ்வாறுதான்... Reviewed by irumbuthirai on June 06, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.