இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு....


தாம் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா தமது பிரத்தியேக Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
“வேலை செய்ய முடியாத தூதுவர்” என்ற தலைப்பில் 
பதிவொன்றை இட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். 
12 இலங்கை மீனவர்கள் தற்போது மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கைது தொடர்பில் மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. 
ஆனால் தொடர்ச்சியான முயற்சியின் பலனாக, பொலிஸ் அதிகாரி ஒருவரினூடாக ஒரே ஒரு நாள் மாத்திரம் அவர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியது என தெரிவித்த அவர் தாம் ஒரு திறனற்ற, தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் உத்தியோகபூர்வமற்ற முறையில் செயற்பட மியன்மாரில் தமக்கு அறிமுகமானவர்கள் எவரும் இல்லை எனவும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
எவ்வாறாயினும், மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் வரை மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சர்களின் பிம்ஸ்டெக் (BIMSTEC) மாநாடு இடம்பெறும் வரையிலும் தாம் பதவியில் தொடர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு.... இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு.... Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.