வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் முறைகள்


வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய சுற்றுநிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பூசியைப் பெறாமல் நாட்டிற்கு வருவோர்... 
இவர்கள் 07 நாட்கள் மாத்திரமே ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவர். இவர்களுக்கு 1வது மற்றும் 
7வது நாளில் பிசிஆர் செய்யப்படும். அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால் ஏழாவது நாள் இவர்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலை நிறைவு செய்யலாம். எஞ்சிய நாட்களை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் வீடுகளில் நிறைவு செய்ய வேண்டும். 

கொரோனா தடுப்பூசி பெற்று இரண்டு வாரங்களின் பின்னர் நாட்டிற்கு வருவோர்... 
இவர்கள் விமான நிலைய வைத்திய அதிகாரியிடம், தடுப்பூசி பெற்றுக்கொண்டமைக்கான சான்றிதழின் முதற்பிரதியை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், அவை ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளில் காணப்பட்டால் உறுதிப்படுத்தப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு சான்றிதலை சமர்ப்பிக்க வேண்டும். 
இவர்களை அரச அதிகாரிகள் தனிமைப்படுத்தல் ஹோட்டல்கள் அல்லது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். 

ஹோட்டல் அல்லாத பொதுவான தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றவர்கள்... 
இவர்கள் முலாவது நாளிலும் 10 ஆவது நாளிலும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இரண்டு பரிசோதனைகளின் போதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாவிட்டால் 10 ஆவது நாளில் தனிமைப்படுத்தலில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் எஞ்சிய நான்கு நாட்களும் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.
வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் முறைகள் வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் முறைகள் Reviewed by irumbuthirai on March 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.