போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்தல்: நேற்று நடைபெற்ற இருவகையான ஆர்ப்பாட்டங்கள்:


போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அதிபர்கள், நிர்வாக சங்கங்கள், ஒன்றிணைந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கல்வி அமைச்சின் முன்பாக நேற்று (19) பகல் பேரணியாக வந்தனர். 
அப்போது அவ்விடத்தில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன கல்வி சேவைகள் 
சங்கத்தின் பிரதிநிதிகள் கூடியிருந்தனர். 
பின்னர் இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் அளவுக்கு சென்றது. 
பொலிசாரின் தலையீட்டை தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 
 இதேவேளை உயர்தரப்பரீட்சை இல்லாமல் நேர்முகப்பரீட்சை மூலம் மாத்திரம் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்க முடியாதா? என்ற அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு எதிரான விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்தல்: நேற்று நடைபெற்ற இருவகையான ஆர்ப்பாட்டங்கள்: போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்தல்: நேற்று நடைபெற்ற இருவகையான ஆர்ப்பாட்டங்கள்: Reviewed by irumbuthirai on March 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.