கொரோனா உடல்களை அடக்கம் செய்ய புதிய இடம்


கொரோனா உடல்களை அடக்க அம்பாறையில் புதிய இடம் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. 

அம்பாறை இறக்காமம் பகுதியில் உள்ள 3 ஏக்கர் பரப்பிலான குறித்த இடம் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடம் என அறியத்தரப்பட்டுள்ளது. 

குறித்த இடத்தில் சுமார் 2000 க்கும் அதிகமான உடல்களை அடக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் குறித்த இடத்திற்கு தொழில்நுட்ப குழுவின் 
பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை தற்போது அடக்கம் செய்யப்படும் ஓட்டமாவடி பிரதேசத்தில் சுமார் 500க்கும் குறைவான உடல்களை மாத்திரமே அடக்கம் செய்ய இடம் எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா உடல்களை அடக்கம் செய்ய புதிய இடம் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய புதிய இடம் Reviewed by irumbuthirai on August 11, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.