தற்காலிக இடமாற்றம் பெற்ற கல்விசாரா ஊழியர்களுக்கான அறிவித்தல்!


தமது நிரந்தர சேவை நிலையத்திலிருந்து தற்காலிக இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்விசாரா ஊழியர்களின் தற்காலிக இடமாற்றத்திற்கான கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

தேசிய பாடசாலை, கல்வியற் கல்லூரி, ஆசிரியர் கல்லூரி மற்றும் ஆசிரியர் மத்திய நிலையங்களின் கல்விசாரா ஊழியர்கள் தொடர்பாகவே இந்த அறிவிப்பை இன்று(9) கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

தற்போது அவர்கள் தற்காலிக இடமாற்றம் பெற்றுச் சென்ற இடத்திலேயே 
தொடர்ந்தும் சேவையாற்ற வேண்டும். அவர்கள் நிரந்தரமாக சேவையாற்றும் இடம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டதும் அங்கு செல்ல வேண்டும். 

அவர்களின் தற்காலிக இடமாற்ற காலம் முடிவடைந்திருந்தாலும் நிரந்தர சேவை இடம் வழமை நிலைமைக்கு திரும்பும் வரை தற்காலிக இடமாற்றம் பெற்ற இடத்திலேயே சேவையாற்ற வேண்டும்.
தற்காலிக இடமாற்றம் பெற்ற கல்விசாரா ஊழியர்களுக்கான அறிவித்தல்! தற்காலிக இடமாற்றம் பெற்ற கல்விசாரா ஊழியர்களுக்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on August 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.