தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி: அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் என கல்வி அமைச்சு அறிவிப்பு:


2021 க்காக தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடு பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
 எனவே மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு 
இணைப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 
 இது தொடர்பான முறைப்பாடுகளையோ அல்லது வௌி நபர்களினூடாக அச்சுறுத்தல் விடுப்பதையோ தவிர்த்துக் கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி: அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் என கல்வி அமைச்சு அறிவிப்பு: தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி: அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் என கல்வி அமைச்சு அறிவிப்பு: Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.