சா.தர மற்றும் உ.தர பரீட்சைகளில் ஏற்படும் மாற்றம்...


சா. தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும், உ. தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கான புதிய யோசனையொன்றை அடுத்தவாரம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் இந்த யோசனையை முன்வைப்பதாகவும், இதன் காரணமாக மாணவர்களின் கல்விக்கு மேலதிகமாக செலவாகும் 
09 மாத காலத்தினை மீதப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். 
மேலும், இது தொடர்பாக பொது மக்களின் ஆலோசனையைப் பெற வேண்டியுள்ளதனால், பெரும்பாலும் இந்த திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்த முடியும் என்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சா.தர மற்றும் உ.தர பரீட்சைகளில் ஏற்படும் மாற்றம்... சா.தர மற்றும் உ.தர பரீட்சைகளில் ஏற்படும் மாற்றம்... Reviewed by irumbuthirai on March 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.